News April 2, 2025
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று ஏற்றம்

டிரம்பின் கூடுதல் வரி விதிப்பு எச்சரிக்கை எதிரொலியாக கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டன. இந்நிலையில், இன்று வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 592 புள்ளிகள் உயர்வடைந்து 76,617ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 166 புள்ளிகள் அதிகரித்து 23,332ஆக நிறைவடைந்தது. 2,755 பங்குகள் உயர்வுடனும், 1,048 பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன.
Similar News
News October 27, 2025
பெண்களே உஷார்! இந்த நோய் உயிரை பறிக்கும்

40 வயதான பெண்களுக்கு brain aneurysm நோய் வருவதற்கான அபாயம் அதிகம் இருக்கிறதாம். மூளையிலுள்ள ரத்த நாளங்கள் வீங்கி, வெடிப்பதைதான் brain aneurysm என்கின்றனர். அப்படி நடந்தால் ரத்தக்கசிவு ஏற்பட்டு, உயிர் பறிபோகலாம். இதற்கு Stress-ம் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே, அடிக்கடி கழுத்து வலி, கடுமையான தலைவலி, திடீரென பார்வை மங்குவது போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாமல் டாக்டரை அணுகுங்கள். SHARE.
News October 27, 2025
விஜய்யின் அரசியல் போக்கு சரியா?

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காமல், மாமல்லபுரத்திற்கு வரவழைத்து விஜய் இன்று சந்திக்க இருக்கிறார். இதுகுறித்து TVK அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஊடகங்களுக்கு கூட அழைப்பு விடுக்காமல் சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறது. ஒருபுறம் அரசியல் நெருக்கடிகள் இருந்தாலும், அதற்கு தீனிபோடும் வகையிலேயே விஜய்யும் செயல்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
News October 27, 2025
9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள மொன்தா புயலைத் தொடர்ந்து 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் தங்களது படகுகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


