News April 2, 2025

இங்கு மாம்பழம் தந்தால் கடன் தீரும்… !

image

சேலம்: அம்மாபேட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது குமரகிரி மலையில் அமைந்திருக்கும் தண்டாயுடபாணி கோயில். இங்கு மாம்பழம் தந்து வழிபட்டால் தொழிற் வளர்ச்சி மேம்படும், கடன் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஞானப் பழத்திற்காக நடந்த சண்டையில் வெளியேறிய முருகன் இளைப்பாறிய இடம் இது என்பது இத் தலத்தின் வரலாறு. கடன் பிரச்சனையில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News October 23, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.23) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News October 23, 2025

மேட்டூர் ஆணை நிலவரம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு!

image

மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடி எட்டியுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிக அளவு உள்ளதால், தற்போது 45,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மென்மேலும் நீர்வரத்து அதிகம் உள்ளதால் தொடர்ந்து 60,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாகவும், அதனால் கரையோர மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி எச்சரித்துள்ளார்.

News October 23, 2025

சேலம் மாவட்ட மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை!

image

சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி மாணவர்கள் செய்யக்கூடாதவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார். ஆறு, குளம், குட்டை பகுதிகளுக்கு செல்லக்கூடாது. நீர் தேங்கியுள்ள பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும். பள்ளிகளில் கழிவு நீர் தொட்டிகள் குடிநீர் தொட்டிகள் கிணறுகள் அருகில் செல்லக்கூடாது. சைக்கிளில் செல்லும்போது சகதி பக்கம் செல்லக்கூடாது என கூறினார்.

error: Content is protected !!