News April 2, 2025

இங்கு மாம்பழம் தந்தால் கடன் தீரும்… !

image

சேலம்: அம்மாபேட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது குமரகிரி மலையில் அமைந்திருக்கும் தண்டாயுடபாணி கோயில். இங்கு மாம்பழம் தந்து வழிபட்டால் தொழிற் வளர்ச்சி மேம்படும், கடன் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஞானப் பழத்திற்காக நடந்த சண்டையில் வெளியேறிய முருகன் இளைப்பாறிய இடம் இது என்பது இத் தலத்தின் வரலாறு. கடன் பிரச்சனையில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News August 13, 2025

சேலம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் முகாம்!

image

சேலம் ஆகஸ்ட் 14 உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் முகாம்கள்:
▶️ அம்மாபேட்டை சமுதாயக்கூடம் புத்துமாரியம்மன் கோவில். ▶️மாசிநாயக்கன்பட்டி கஸ்தூரிபா திருமண மண்டபம் அயோத்தியாபட்டினம்.
▶️ தலைவாசல் விளையாட்டு மைதானம் காமகபாளையம்.
▶️மேச்சேரி சுய உதவி குழு கட்டிடம் ஓலப்பட்டி.
▶️காடையாம்பட்டி எஸ் எஸ் வி ஜமீன் மஹால் நடுப்பட்டி.
▶️சங்ககிரி நாடார் சமுதாயக்கூடம் வட்டமலை. ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.

News August 13, 2025

காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை!

image

நாட்டின் 79-வது சுதந்திர தின விழா வரும் ஆக.15- ஆம் தேதி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. காவல்துறையினரின் அணிவகுப்பு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், சேலம் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

News August 13, 2025

சேலம் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில்கள் ரத்து

image

அக்.11-ல் தன்பாத்- கோவை சிறப்பு ரயில் (03679), அக்.14- ல் கோவை-தன்பாத் சிறப்பு ரயில் (03680), அக.13- ல் ப்ரௌனி- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (12521), அக்.17- ல் எர்ணாகுளம்-ப்ரௌனி எக்ஸ்பிரஸ் ரயில் (12522) ஆகிய சேலம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!