News April 2, 2025
குளத்தில் குளித்த +2 மாணவர் நீரில் மூழ்கி பலி

செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் திவாகர் (வயது-17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள குளத்திற்கு இன்று நண்பர்களுடன் காலை குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கினார். நண்பர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 24, 2025
நெல்லை: பி.எம் கிசான் 21வது தவணைக்கு இது கட்டாயம்!

PM-KISAN திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.6,000 நிதி உதவி பெற, தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம். இதை 21வது தவணை பெறுவதற்குள் விவசாயிகள் பெற வேண்டும். இதற்காக, விவசாயிகள் தங்கள் நில விவரங்களை அனைத்து வட்டாரங்களிலும் பதிவு செய்து (Farmer Registry), ஆதார், கைப்பேசி எண், சிட்டா நகலுடன் இங்கு <
News October 24, 2025
நெல்லை: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு! ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்<
News October 24, 2025
நெல்லை: திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி கோட்டம் சார்பில் திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வருகிற 26ம் தேதி பிற்பகல் முதல் 28ம் தேதி வரை 220 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நெல்லை உள்ளிட்ட தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இந்த சிறப்பு பஸ்கள் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும். திருச்செந்தூர் செல்லும் பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


