News April 2, 2025
தூத்துக்குடியில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 தொழில்நுட்ப உதவியளர்(Field Technician) காலிப்பணியிடம் உள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 29 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News December 6, 2025
தூத்துக்குடி: பேருந்து சக்கரத்தில் சிக்கி போட்டோகிராபர் பலி

முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்(36), போட்டோகிராபர். இவர் நேற்று தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள டைடல் பார்க் அருகே டூவீலரில் வந்து கொண்டிருந்த போது, அங்கு இருந்த பேரிக்கார்டு மீது தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதி அதன் சக்கரத்தில் சிக்கி ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 6, 2025
தூத்துக்குடி: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி, துளசிபட்டி, பிள்ளையார் நத்தம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE
News December 6, 2025
தூத்துக்குடி: விவசாயிகளுக்கு குட் நியூஸ்! ரூ.1,250 மானியம்

கோவில்பட்டி, எட்டையாபுரம் வட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். பருத்திப் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படுகிறது. இந்தபூச்சிக்கொல்லி மருந்தை ட்ரோன் மூலம் அடிப்பதன் மூலம் செயல்திறன், கூலி, நேரம் ஆகியவை மிச்சமாகிறது. எனவே டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க அரசு ஒரு ஹெக்டருக்கு ரூ.1,250 பின்னேற்பு மானியமாக வழங்குகிறது என வேளாண் துறை தெரிவித்துள்ளது.


