News April 2, 2025
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி காலமானார்!

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான நிலம்பென் பாரிக் (92) காலமானார். மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் பேத்தி இவர். குஜராத்தில் வசித்து வந்த இவர், பழங்குடியின பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார். காந்திக்கும் அவரின் மூத்த மகனுக்கும் இடையே இருந்த சிக்கலான உறவு குறித்து இவர் எழுதிய ‘காந்தி’ஸ் லாஸ்ட் ஜிவெல்: ஹிராலால் காந்தி’ மிக பிரபலம். RIP நிலம்பென் பாரிக்.
Similar News
News October 14, 2025
சினிமாவில் நன்றி இல்லாமல் போய்விட்டது: பேரரசு

படம் முடிந்தால் போதும் சில நடிகைகள் யாரையும் மதிப்பது கிடையாது என இயக்குநர் பேரரசு வேதனையுடன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த பட விழாவில் பேசிய அவர், சினிமாவில் நன்றி என்பதே இல்லாமல் போய்விட்டது என்றார். படம் முடிந்த பிறகு ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் முக்கிய நடிகர்கள் வருவதில்லை என்ற பேச்சு எழுந்தது. குறிப்பாக அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் மீது பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
News October 14, 2025
Windows 10-க்கான காலக்கெடு நீட்டிப்பு

<<17898791>>Windows 10<<>> OS-ஐ முடிவுக்கு கொண்டு வரும் திட்டத்தை மைக்ரோசாஃப்ட் சில மாதங்களுக்கு தள்ளிப்போட்டுள்ளது. இன்றுடன் செக்யூரிட்டி அப்டேட் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பயனர்களின் கோரிக்கையை ஏற்று, 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்துள்ளது. இந்த குறிப்பிட்ட காலவரையறைக்குள் பயனர்கள் Windows 11-க்கு அப்டேட் செய்ய வேண்டும் அல்லது சைபர் தாக்குதலுக்கு எளிதாக உள்ளாகும் வாய்ப்பு ஏற்படும்.
News October 14, 2025
எந்தெந்த தொகுதி: பாஜக கூட்டணியில் குழப்பம்

பிஹார் தேர்தலையொட்டி, பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் குழப்பம் நீட்டிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக, ஜேடியு தலா 101 தொகுதிகளிலும், சிராக் பஸ்வான் கட்சி 29 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆனால், கூட்டணி கட்சிகள் ஒரே தொகுதிகளை கேட்பதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இதனால், இன்று நடக்கவிருந்த பாஜக கூட்டணி தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.