News April 2, 2025

நாங்குநேரி தொழில்பேட்டை விரைவில் உருவாகும்

image

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நாங்குநேரி எம்எல்ஏ பேசுகையில் நாங்குநேரி தொழிற்பேட்டை எப்போது அமையும் என கேட்டார். அதற்கு அமைச்சர் ராஜா நாங்குநேரி தொழில்பேட்டை பிரச்சனைகள் வெகு விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் டிட்கோ நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சட்ட சிக்கல்கள் எல்லாம் நீக்கப்பட்டு நிச்சயமாக அங்கு தொழில்பேட்டை உருவாகும் என்றார்.

Similar News

News December 16, 2025

நெல்லை: பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி

image

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஷேக் ரோகித் (26) நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உணவகத்தில் பணியாற்றி வந்தார். நேற்று பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கையில், வண்ணாரப்பேட்டை பகுதியில் சென்றபோது ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பைக்கில் வந்த மேலப்பாளையம் ஆதில் (20), கலீல் ரகுமான் (20) காயமடைந்தனர். இதுகுறித்து பாளை போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 16, 2025

நெல்லை: டிகிரி போதும்.. ரூ.85,920 வரை சம்பளம்! APPLY NOW

image

திருநெல்வேலி மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்காலம். சம்பளம்: ரூ.24,050 முதல் ரூ.85,920 வரை. எழுத்து தேர்வு மூலம் வேலை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News December 16, 2025

நெல்லை கட்டிடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகன் பாஸ்கர் (36). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் பாஸ்கர் மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த அவரது மனைவி ஜெயா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாஸ்கர் நேற்று இரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!