News April 2, 2025

அரியலூரில் சுட்டெரித்த வெயில்-பரிதவித்த மக்கள்

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

Similar News

News December 22, 2025

அரியலூர்: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது?

image

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-ல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், <>hrcnet.nic.in<<>> என்ற இணையதளம் மூலமாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உங்களால் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் கோர்ட், கேஸ் என்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

News December 22, 2025

அரியலூரில் 496 பேர் ஆப்சென்ட்

image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு அரியலூரில் நடைபெற்றது. மொத்தம் 1870 பேர் விண்ணப்பித்த நிலையில், 1374 பேர் தேர்வில் பங்கேற்றனர்; 496 பேர் எழுதவில்லை. தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிலைய மையத்தில் நடைபெற்ற தேர்வை காவல் துறை துணைத் தலைவர் ஆனிவிஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி பார்வையிட்டனர்.

News December 22, 2025

அரியலூர்: கல்வி உதவித்தொகை வேண்டுமா?

image

பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தில் 2025-26-ம் கல்வியாண்டில் பயன்பெற அரசு கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மாணவ-மாணவிகள் தங்களது கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் வருகிற 31-ம் தேதி ஆகும் என ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!