News April 2, 2025
கஞ்சா கடத்திய 4 பேர் கைது: 210 கிலோ கஞ்சா பறிமுதல்

வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக ஆற்காடு தாலுகா காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சோதனை மேற்கொண்ட போலீசார் 210 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 கார்களை பறிமுதல் செய்து ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த ரெலிமஜி, கவுரப் திருப்பிடிகா உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Similar News
News August 25, 2025
ராணிப்பேட்டை இரவு ரோந்து பணி விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News August 25, 2025
ராணிப்பேட்டையில் நாளை மின் நிறுத்தம்

ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 25) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி.மோட்டூர், ஜெயராமன் பேட்டை பழைய ஆற்காடு சாலை காந்திநகர் மேல் புதுப்பேட்டை பிஞ்சு அல்லிக்குளம் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News August 24, 2025
இரா.பேட்டை: விநாயகர் சதுர்த்தி குறித்து கூட்டம்

வருகின்ற 27.08.2025 அன்று நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இருந்தனர். மேலும் இந்த நிகழ்வில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.