News April 2, 2025
‘சூப்பர் ஸ்டார் ஒற்றைக்கொம்பன்’ காளை உயிரிழப்பு

வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பன்னீர், ‘வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் ஒற்றைக்கொம்பன்’ என்ற காளையை வளர்த்து வந்தார். இந்த காளையானது கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற எருது விடும் விழாவில் பங்கேற்று, முதல் பரிசை பெற்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 1) காளை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
Similar News
News November 12, 2025
திருப்பத்தூரில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக குறை தீர்வு கூட்டரங்கில் 12.11.2025 அன்று முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை உடனுக்குடன் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னாள் படைவீரர்கள் தேவைகள் கவனிக்கப்பட்டது.
News November 12, 2025
திருப்பத்தூர்: எஸ்.பி அலுவலகத்தில் குறைத்தீர்வு கூட்டம்

திருப்பத்தூர், மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (நவ.12) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 42 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
திருப்பத்தூர்: தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


