News April 2, 2025
கஞ்சா, கள், சாராயம் விற்ற பெண்கள் உட்பட 63 பேர் கைது

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தா தலைமையில் அரூர் கோட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் கடந்த மாதம் நடத்திய சோதனையில், மதுபானம் விற்பனை செய்து 7 பெண்கள் உட்பட 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 661 மது பாட்டில்கள், 324 லிட்டர் கள், 2 கிலோ கஞ்சா, 32 லிட்டர் சாராயம் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நேற்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 4, 2025
தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று (நவ.04) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ராஜாசுந்தர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள, தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்
News November 4, 2025
நான்காண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கம்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கம் (SBM 2.0) திட்டத்தின் கீழ், ரூ.4.59 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கழிப்பறைகள் கட்டும் பணி, நகராட்சி உரக்கிடங்கில் Bio-Mining முறையில் குப்பைகள் அகற்றும் பணி, பொருட்கள் மீட்பு கூடம் (MRF) அமைக்கும் பணி, STP-யில் (Decanting Facility) கட்டும் பணி நடைபெற்றுள்ளது.
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
News November 4, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தீவிரம்

தர்மபுரியில் உள்ள 7 சட்டமன்ற தொகுதி உட்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி அறிவிக்கப்பட்டுள்ளது .வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) , 2002ம் ஆண்டில் நடத்தப்பட்ட SIR-ல் உங்களின் பெயரோ உங்களின் பெற்றோரின் பெயரோ இருந்தால் ஆவணங்கள் ஏதும் தேவையில்லை.
வாக்காளர் செய்ய வேண்டியது BLO தரும் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் இது போன்ற கணக்கிட்டு படிவத்தை பூர்த்தி செய்து தர வலியுறுத்தப்படுகிறது


