News April 2, 2024
கடலூர் அருகே 10 பவுன் நகை திருட்டு

கடலூர் அடுத்து உச்சிமேடு ஊராட்சியை சேர்ந்தவர் லதா (55). இவர் நேற்று இரவு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து தகவலின் பேரில் ரெட்டிசாவடி போலீசார் மோப்பநாய் உதவியுடன் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News September 19, 2025
கடலூரில் பெற்றோர்கள் கவனத்திற்கு… இது முக்கியம்!

கடலூர் மக்களே.. உங்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பள்ளி முதல் ஆதார், பாஸ்போர்ட் பெறுவதற்கு மிக முக்கியமானதாகும். பிறப்பு சான்றிதழ் பெற இனி அலைச்சல் வேண்டாம். புதிய சான்றிதழ் பெறுவதற்கும், தொலைந்த சான்றிதழ் பெறுவதற்கும் இங்கே <
News September 19, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்று உள்ள நலன்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 7,000-க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இம்முகாம்களில் மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் பொதுமக்களுக்கு தலைமை மருத்துவமனைகளில் உயர்சிகிச்சை வழங்கி பொதுமக்களின் நலனை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
கடலூர்: எச்.ஐ.வி. நோய் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

கடலூர் டவுன்ஹால் அருகே எச்.ஐ.வி /எய்ட்ஸ் பால்வினை நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் இன்று விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். உடன் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மணிமேகலை, துணை இயக்குநர் (காசநோய்) கருணாகரன் உள்பட பலர் உள்ளனர்.