News April 1, 2025

பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு

image

இன்றைய IPL போட்டியில், பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது லக்னோ அணி. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணியின் துவக்க வீரர் மார்ஷ் 0 ரன்களிலும் கேப்டன் பண்ட் 2 ரன்களிலும் வெளியேறினர். இறுதியாக, அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Similar News

News April 8, 2026

அண்ணாமலைக்கு முக்கிய பதவி?

image

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படுவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதேநேரம், தேர்தல் முடியும் வரை தமிழக பாஜகவை அமைப்பு ரீதியாக வழிநடத்த குழு அமைப்பது தொடர்பாக அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News April 8, 2026

ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!

image

தங்கள் மீதான தாக்குதலை <<19594820>>2 வார காலத்திற்கு நிறுத்திவைத்த<<>> டிரம்ப்பின் முடிவை ஈரான் வரவேற்றுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், ஈரானின் ஆயுதப் படைகள் தங்களது தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளும் என தெரிவித்துள்ளது. அதனையடுத்து ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியமாகும் எனவும் கூறியுள்ளது.

News April 8, 2026

இனி போலீசார் லத்தியை எடுக்கவே கூடாது!

image

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கின் எதிரொலியாக தமிழக போலீஸ் ஸ்டேசன்களுக்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர்களின் உத்தரவின்றி இனி போலீசார் லத்தியை எடுக்கவே கூடாது. இன்ஸ்பெக்டர் & DSP-களின் கண்காணிப்பின்றி ஸ்டேசன்களில் யாரையும் விசாரிக்க கூடாது. விசாரணையின்போது அடிக்க பயன்படுத்தும் இரும்பு, பிளாஸ்டிக் குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!