News April 1, 2025
ஆங்கிலம் பேச வரலையா? அரசு பள்ளியில் விரைவில் புதுதிட்டம்

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆங்கிலத்தில் பேச சிரமப்படுகின்றனர். இந்த குறையை போக்க மாநில அரசு, அடுத்த கல்வியாண்டில் ஆங்கில தொடர்புதிறன் பயிற்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆங்கிலத்தில் திறமை வாய்ந்த, புதிய வழிகள் மூலம் போதிக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்கள் மூலம் 6-8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில தொடர்புதிறன் பயிற்சியை கொடுக்க அரசு பரிசீலித்து வருகிறது.
Similar News
News October 23, 2025
அதிகாரிகளை வறுத்தெடுத்த செல்வப்பெருந்தகை

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஐந்து கண் மதகில் 3 ஷட்டர்கள் வழியாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகளுடன் நேற்று அங்கு, ஸ்ரீபெரும்புதுார் MLA செல்வப்பெருந்தகை ஆய்வில் ஈடுபட்டார். அப்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் தண்ணீரை திறந்து விட்டது ஏன் என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். நீங்களே மக்கள் பிரதிநிதியாகி விட்டால் எதற்கு அரசு எனவும் கடிந்துகொண்டார்.
News October 23, 2025
5 நிமிடம் இத பண்ணுங்க.. உடல் புத்துணர்ச்சி பெறும்

வருண முத்ரா உடலில் நீர் உள்ளடக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், நீரிழப்பை தடுக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வலது கையின் சிறு விரலை, உள்நோக்கி மடித்து, கட்டை விரலை அத்துடன் சேர்த்து பிடித்து, மற்ற 3 விரல்களை நீட்டிப் பிடிக்கவும். கைகளை மார்புக்கு முன் வைத்து, விரல்களை அழுத்திப் பிடிக்கவும். இந்த நிலையில் ஆழமாக மூச்சை இழுத்து விடவும். இப்படி ஒரு 5 நிமிடம் செய்யுங்கள்.
News October 23, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. கலெக்டர் அறிவித்தார்

சென்னையில் இன்று(அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். சில இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அம்மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவித்திருந்தார். முன்னதாக தருமபுரியில் இன்று பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறையாகும்.