News April 1, 2025
அடையாள எண் பெற பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 1061 கிராமங்களிலும் நில உடைமைகளை சரிபார்த்தல் பணிகள் 8.2.2025 முதல் நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசு திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற தனித்துவமான அடையாள எண் பெற மார்ச் 30ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. நிலையில் தற்போது வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை தங்கள் நில உடமைகளை பதிவு செய்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
தி.மலை பெண்களுக்கு தேவையான எண்கள்- CLICK!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!
News March 13, 2026
தி.மலை: திமுகவை வறுத்தெடுத்த Ex.எம்.எல்.ஏ!

தூத்துக்குடியில் 17 வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா தெரிவித்துள்ளார். ”பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது, சட்டம் ஒழுங்கை காக்கத் அரசு தவறுகிறது” என்றும், அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
News March 13, 2026
தி.மலையில் இரவு ரோந்து – காவல்துறை அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேணும் வகையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணிக்காக காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் அல்லது உடனடி காவல் உதவிக்காக 100 என்ற அவசர எண் மூலம் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


