News April 1, 2025
இந்த கொடூர கொலையே சாட்சி: ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்

தி.மலையில் போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில், போதைப்பொருட்கள் இளைஞர்களை எப்படி சீரழிக்கின்றன என்பதற்கு இதுவே சாட்சி என விமர்சித்த அவர், விளம்பர ஷூட்டிங்கில் வந்து ‘போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்’ என்று வசனம் பேசினால் மட்டும் போதாது முதல்வரே, போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 14, 2026
சென்னை: விரக்தியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

சென்னை, கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவரது மகள் பிரியங்கா (16). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வந்தார். இந்நிலையில், அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால், பெற்றோர் பிரியங்காவை கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த பிரியங்கா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 14, 2026
அதிமுக கூட்டணியில் இணைந்தார்

ஊராளிக் கவுண்டர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் NV நாகராஜ், EPS-யை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். நேற்று தமமுகவின் நிறுவனர் <<18845319>>ஜான் பாண்டியன்<<>>, தாங்கள் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்திருந்த நிலையில், அடுத்தடுத்து கூட்டணியை இறுதி செய்யும் பணியில் EPS இறங்கியுள்ளார். வரும் 23-ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்ய அதிமுக மும்முரம் காட்டி வருகிறது.
News January 14, 2026
இது ரவுடித்தனம். சுதா கொங்கரா டைரக்ட் அட்டாக்!

முகம் தெரியாத ID-க்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்புகிறார்கள் என சுதா கொங்கரா கடுமையாக விமர்சித்துள்ளார். இது அரசியல் ரீதியான எதிர்ப்பு இல்லை என குறிப்பிட்ட அவர், வெளிவராத படத்தின் நடிகரின் ரசிகர்களின் செய்வது என நேரடியாக விஜய் ரசிகர்களை குற்றம் சாட்டினார். மேலும், இது ரவுடித்தனத்தை என சுட்டிக்காட்டி, அதனை தாங்கள் எதிர்த்து போராடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


