News April 1, 2025
திருப்பங்கள் தரும் திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி

சோழநாட்டின் திருச்செந்தூர் என போற்றப்படும் திருவிடைக்கழி சுப்ரமணியசாமி கோயிலில் முருகர் குரா மரத்தின் அடியில் இன்றும் உலாவருவதாக ஐதீகம். முருகன் தவமிருந்து சாபவிமோசனம் பெற்ற இங்கு முருகரும், ஈசனும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். நாம் ஒருமுறை இங்கு சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும் ராகு தோஷம், புத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் தீரும் என்பது நம்பிக்கை (Share it)
Similar News
News March 10, 2026
மயிலாடுதுறை: வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்

மயிலாடுதுறை சட்டமன்ற வேட்பாளராக நாதக சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திருவெண்காடு காசிராமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முதல் கட்டமாக மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் வாக்கு கேட்டு, தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News March 10, 2026
மயிலாடுதுறை: ஊழியரிடம் லட்ச கணக்கில் பணம் அபேஸ்

மதுரை சேர்ந்த தனியார் பெயிண்ட் நிறுவன ஊழியர் ஆறுமுகம்(54). இவர் மயிலாடுதுறையில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு அனுப்பிய பெயிண்டுக்கான தொகையை வசுலிக்க வந்த நிலையில், மயிலாடுதுறையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த 1.90 லட்சம் வசூல் பணத்தை காணவில்லை. பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து cctv காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 10, 2026
மயிலாடுறையில் நாளை மின்நுகர்வோர் கூட்டம்!

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை(மார்.11) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டமானது நாகை மின்பரிமான மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் கலந்து கொண்டு, தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர்(பொறுப்பு) ரேணுகா தெரிவித்துள்ளார்.


