News April 1, 2025
12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு SBI வங்கியில் வேலை

திருச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் தற்காலிக அலுவலக உதவியாளர் பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் 25,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு <
Similar News
News October 20, 2025
திருச்சி: கடும் விலை உயர்வு!

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சியில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று 1 கிலோ மல்லிகை பூ ரூ.3,000-க்கும், முல்லைப் பூ ரூ.3,000-க்கும், ஜாதிப் பூ ரூ.2,000-க்கும், செவ்வந்தி பூ ரூ.1000-க்கும் விற்பனையானது. இதனால் மார்க்கெட்டில் பூ வாங்க பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பூக்களின் வரத்து குறைவே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
News October 20, 2025
திருச்சி: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 20, 2025
திருச்சி: மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி

லால்குடி அடுத்த காட்டூரை சேர்ந்தவர் கதிரவன் (37). இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெள்ளனூர் துணை மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவர், நேற்று காலை புதூர் உத்தமனூர் அருகே உயர் மின் அழுத்த பாதையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசிப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.