News April 1, 2025
வெயிலால் எகிறிய பீர் விற்பனை

வெயில் வெளுத்து வாங்குவதால், டாஸ்மாக்கில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமாக குளிர் காலத்தில் பிராந்தி, விஸ்கி, ரம் ஆகியவை அதிகமாகவும், பீர் விற்பனை குறைவாகவும் இருக்கும். தற்போது வெயில் அதிகரித்துள்ளதால், பிராந்தி, விஸ்கிக்கு பதில் மது பிரியர்கள் பீரை அதிகளவில் வாங்குகின்றனர். இதனால் சுமார் 30% பீர் விற்பனை அதிகரித்துள்ளது. அதுவும், பீர் சில்னஸ் குறைவாக இருந்தால் கூட வாங்க மறுக்கின்றனராம்.
Similar News
News February 3, 2026
நடிகை ராஜேஸ்வரி தற்கொலை.. சக நடிகர்கள் வேதனை

நடிகை ராஜேஸ்வரியின் தற்கொலை மீண்டும் சின்னத்திரை ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது. அதற்கு காரணம், அவர் நடித்துவந்த சிறகடிக்க ஆசை சீரியலில் ராஜேஸ்வரி இறப்பது போன்ற காட்சி நேற்று ஒளிபரப்பானதுதான். இதுகுறித்து வேதனையுடன் சக நடிகர் <<19035018>>பழனியப்பன்<<>> வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, ராஜேஸ்வரியின் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை என அந்த சீரியலின் நடிகர்கள் பலரும் SM-ல் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
News February 3, 2026
பிப்.10-ல் பொதுக்குழு.. அன்புமணி அடுத்த ஸ்கெட்ச்

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமக (அன்புமணி), வட மாவட்டங்களில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை காமராஜர் அரங்கத்தில் பிப்.10-ம் தேதி பாமக இளைஞரணியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்துள்ளார். இந்த பொதுக்குழுவில் தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடும் அவர், சில தொகுதிகளுக்கான வேட்பாளரையும் அறிமுகம் செய்வார் என கூறப்படுகிறது.
News February 3, 2026
தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹10,000 மானியம்

நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி தென்னை விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற Coconut Promotion Scheme திட்டம் குறித்து FM நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். *தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹10,000 மானியம் வழங்கப்படும். *உயர்தர தென்னை மரக்கன்று இலவசமாக வழங்கப்படும். *தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ஹைடன்சிட்டி பிளான்டேஷன் முறை ஊக்குவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


