News April 1, 2025

மனைவியுடன் வீடியோ காலில் பேசியபடி கணவர் தற்கொலை

image

புவனகிரியை சேர்ந்த உசேன் ஷெரிப் என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரியாங்குப்பம் வேலன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ரம்ஜான் கொண்டாட புவனகிரிக்கு சென்ற அவரது மனைவிக்கு வீடியோ கால் செய்து, தான் தற்கொலை செய்யப்போவதாக கூறியபடி மனைவியின் கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 13, 2025

புதுவை முதலமைச்சரின் புதிய அறிவிப்பு!

image

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை தலா ரூ.5 ஆயிரமும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.10 ஆயிரமும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.15 ஆயிரமும், கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும். இது விரைவில் செயல்படுத்தப்படும்.” என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். SHARE IT NOW…

News August 13, 2025

புதுச்சேரி காவல்துறையில் வேலை-APPLY NOW

image

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர்கள், 148 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இன்று (ஆக.13) காலை 10 மணி முதல் வரும் செப்டம்பர் 12-ம் தேதி மாலை மாலை 3 மணிக்குள் https://recruitment.py.gov.in/ என்ற இனையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க..

News August 13, 2025

புதுவையில் இளம்பெண் தற்கொலை

image

கிருமாம்பாக்கம், பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபராதி (24). இவருக்கும், நரம்பை கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த இளைஞர் சிங்கப்பூரில் பணியாற்றுவதால் சொந்த ஊருக்கு வர தாமதம் ஏற்பட்டு, திருமணம் தடைப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த உமாபாரதி தற்கொலை செய்துகொண்டதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!