News April 1, 2025
சாலையை கடக்கும்போது தண்ணீர் லாரி மோதி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (48). கொத்தனாரான இவர், நேற்று முன்தினம் (மார்.31) பகல் 2 மணி அளவில் வெங்காடு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து இரும்பேடு நோக்கி சென்ற தண்ணீர் லாரி அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே உயிரிழந்தார்.
Similar News
News February 16, 2026
காஞ்சிபுரம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

காஞ்சிபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 16, 2026
ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கர விபத்து!

காஞ்சிபுரம்; வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவகம் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில், மின் கம்பம் சேதமடைந்து, காரின் மேல் விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காரில் இருந்த டிரைவர், 3 பெண்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
News February 16, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து போலிசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.


