News April 1, 2025
சபரிமலை கோயில் இன்று நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு விழாவுக்காக இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் 14ம் தேதி விஷு கனி தரிசனம், படி பூஜைகள் நடைபெற்று, ஏப்ரல் 18ம் தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் நடை அடைக்கப்படும். தொடர்ந்து வைகாசி மாத பூஜைக்காக மே 14ம் தேதி திறக்கப்பட்டு, மே 19ம் தேதி நடை அடைக்கப்படும். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.
Similar News
News January 21, 2026
VIRAL: அமிதாப் பச்சன் வீட்டில் தங்கத்தில் டாய்லெட்!

பாலிவுட் நடிகர் விஜய் வர்மா, 2016-ல் எடுத்த செல்ஃபி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அமிதாப் பச்சனோடு ‘பிங்க்’ படத்தில் நடித்த போது விஜய் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தங்க டாய்லெட் முன்பு செல்ஃபி எடுத்துள்ளார். அந்த செல்ஃபி உள்பட அமிதாப்புடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பகிர்ந்து, 2016 தனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டாக அமைந்ததாக அவர் தற்போது பதிவிட்டுள்ளார்.
News January 21, 2026
ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன?

பாமக (அன்புமணி), அமமுக என NDA கூட்டணியில் அடுத்தடுத்து கட்சிகள் இணைந்து வருகின்றன. அதேநேரம், திமுக, மாற்றுக் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை இணைத்து வருகிறது. இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ், கூட்டணி தொடர்பாக இன்று மாலை தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தவுள்ளாராம். எனவே, அவரது முடிவும் நாளைக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைப்பார்?
News January 21, 2026
RR, RCB-க்கு கெடு விதித்த BCCI

ஜன.27-ம் தேதிக்குள் தங்களது சொந்த மைதானங்களை உறுதிப்படுத்துமாறு RR, RCB அணிகளுக்கு BCCI காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18497857>>பெங்களூரு மைதானத்தில்<<>> கடந்த ஜூன் மாதம் கூட்டநெரிசலில் 11 பேர் பலியானதை அடுத்து, அங்கு இதுவரை ஒரு போட்டி கூட நடத்தப்படவில்லை. அதேபோல், கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தல் நடைபெறாததால், ஜெய்பூரில் போட்டி நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


