News March 31, 2025
தொழில்நுட்பத்தால் உயிர் பிழைக்கும் பேருயிர்கள்

கோவை – பாலக்காடு ரயில் வழித்தடத்தில் கடந்த 27 மாதங்களாக யானைகள் ஏதும் உயிரிழக்கவில்லை என்று ரயில்வே நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அடர்ந்த காடுகளைக் கொண்ட இந்த வழித்தடத்தில் அவ்வப்போது யானைகள் ரயிலில் அடிபடுவதுண்டு. அதனை தடுக்கும் வகையில், அதிநவீன கேமரா கோபுரங்கள் உள்ளிட்டவற்றுடன் எடுக்கப்பட்ட தொழில்நுட்ப நடவடிக்கைகள் பலனளித்துள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.
Similar News
News January 17, 2026
மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி

மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘Composite Salary Account Package’ -ஐ நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி வங்கி, காப்பீடு சேவைகள் ஒரே கணக்கின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு பல புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து பிரிவு ஊழியர்களுக்கு விபத்து காப்பீடாக ₹1.5 – 2 கோடி, ஊனம் ஏற்பட்டால் ₹1.5 கோடி வழங்கப்படும். மேலும், வீடு, கல்வி, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டிவிகிதம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
News January 17, 2026
டிரம்ப் முடிவால் இந்தியாவுக்கு பின்னடைவு

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% கூடுதலாக வரிவிதிக்கப்படும் என <<18842996>>டிரம்ப்<<>> எச்சரித்திருந்த நிலையில், இந்தியாவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. <<18868892>>ஈரானில்<<>> பல ஆயிரம் கோடி மதிப்பில் அமைத்து வந்த சபஹார் துறைமுகத்தில் இருந்து வெளியேறும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், ஏப்ரல் வரை டிரம்ப் கால அவகாசம் கொடுத்துள்ளதால், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News January 17, 2026
கடைசி போட்டியிலாவது விளையாட விடுங்கள்: அஸ்வின்

நியூஸி.,க்கு எதிரான 2 ODI-களிலும் அர்ஷ்தீப் சிங்கை அணியில் சேர்க்காதது குறித்து அஸ்வின் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 3-வது போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர் இந்த இடத்தை அடைய கடுமையாக உழைத்துள்ளார். இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு அவர் உறுதியான பங்களிப்புகளை செய்திருந்தும், அணியில் இடம் கிடைப்பது தொடர் போராட்டமாகவே இருந்து வருவதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.


