News March 31, 2025

கடலூர்: பிரம்மாண்ட புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு

image

கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் புத்தகத் திருவிழாவை கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கணேசன் மற்றும் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்தனர். இந்நிலையில் கடந்த 9 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்ட புத்தகத் திருவிழா இன்றுடன் (31ம் தேதி) நிறைவடைகிறது.

Similar News

News February 4, 2026

கடலூர்: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

image

கடலூர் மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 4, 2026

கடலூர்: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

image

கடலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in என்ற<<>> இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News February 4, 2026

கடலூர்: கார் மோதி பாதயாத்திரை சென்ற பெண் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சாமிதுரை என்பவரது மனைவி அசோதை (60). இவர் தனது ஊரைச் சேர்ந்தவர்களுடன் நேற்று மாலை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்றார். மாலை 6 மணியளவில் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் மேம்பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியதில், படுகாயமடைந்த அசோதை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!