News March 31, 2025
பசியில் வாடும் பிஞ்சுகள்.. இடிந்த மசூதியில் தொழுகை

இஸ்ரேலால் சுக்குநூறாக காசா நொறுக்கப்பட்டது. தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தப்படுவதால் உணவின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் நரக வேதனை அடைந்து வருகின்றனர். இதனிடையே, ரம்ஜானையொட்டி இடிந்த மசூதிகளுக்கு வெளியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். இருள் சூழ்ந்த இந்த கால கட்டத்தில் இருந்து விரைவில் விடுதலை கிடைக்க பிரார்த்தனை செய்தனர்.
Similar News
News January 18, 2026
நெல்லை: சுற்றுலாவிற்கு நாளை முதல் தடை!

களக்காடு புலிகள் காப்பக வனக்கோட்டத்தில் ஒருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்பு பணி நாளை துவங்குகிறது. இதனை முன்னிட்டு மலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும், சுற்றுலாவிற்கும் நாளை (ஜன 19) முதல் 6 நாட்கள் அனுமதி மறுக்கப்படுகிறது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தலைமையில், மாநில வன துறைகளின் ஒத்துழைப்புடன் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது.
News January 18, 2026
அல்கொய்தாவின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை

கடந்த டிசம்பரில் 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, சிரியாவில் உள்ள <<18825125>>ISIS<<>> அமைப்பின் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கர்கள் மீதான ISIS தாக்குதலுடன் தொடர்புடைய அல்கொய்தா கிளை அமைப்பின் தலைவரை, அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றுள்ளது. கொல்லப்பட்ட பிலால் ஹசன் அல் ஜாசிம், ISIS-ன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
News January 18, 2026
தமிழகத்தில் GI டேக் அங்கீகாரம் பெற்ற பொருள்கள்

காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி என்று ஊர் பெயருடன் சேர்த்து சொல்ல காரணம், மற்ற இடங்களை விட இந்த ஊர்களில் அவை தனித்துவமான தரம் & சிறப்புடன் உருவாகின்றன. இந்த பொருள்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு (GI) அங்கீகாரத்தை வழங்குகிறது. தமிழகத்தில் 69 பொருள்கள் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளன. அந்த லிஸ்ட்டில் பலரும் அறியாத சிலவற்றை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை இடது புறமாக Swipe செய்து அறிந்து கொள்ளவும்.


