News March 31, 2025
46 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்கக் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் நாளை முதல் 46 சுங்கச்சாவடிகளில் 2.5%- 2.7% வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இதில் 8 சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளவை. எஞ்சிய 38 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளவை. புதிய கட்டண உயர்வின்படி, கார்களுக்கான கட்டணம் ரூ.5, பஸ்கள் மற்றும் பிற வாகனங்களுக்கான கட்டணம் ரூ.15- ரூ.30 வரை அதிகரிக்கிறது. நெமிலி, சின்னசமுத்திரம் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படாது.
Similar News
News January 24, 2026
தமிழகத்தில் சாதி மதச் சண்டைகள் இல்லை: CM

அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில் திமுக ஆட்சியில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளது என புள்ளி விவரங்கள் கூறுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் கவர்னர் உரைக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் சாதி, மதச் சண்டை, கும்பல் வன்முறை கிடையாது என்றார். எனவே கவர்னரின் பார்வை தான் பழுதுபட்டுள்ளது என காட்டமாக கூறினார். மேலும், கவர்னர் பதவியை அவரே (RN ரவி) அவமானப்படுத்துவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
News January 24, 2026
BREAKING: ஓபிஎஸ் – அமைச்சர் சேகர் பாபு திடீர் சந்திப்பு

சபாநாயகர் அறையில் OPS-ஐ அமைச்சர் சேகர் பாபு சந்தித்து 15 நிமிடங்கள் பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் தங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து OPS-யிடம் சேகர் பாபு கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. OPS அணியில் இருந்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அடுத்தடுத்து திமுகவில் ஐக்கியமான நிலையில், இந்த சந்திப்பானது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
News January 24, 2026
₹2,000 உதவித்தொகை.. CM ஸ்டாலின் புதிய அறிவிப்பு

முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை நீட்டிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் தற்போது 33 லட்சம் பேர் பயன்பெற்று வரும் நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்த மேலும் 1.8 லட்சம் பேருக்கு வரும் 4-ம் தேதி முதல் உதவித்தொகை வழங்கும் பணிகள் தொடங்க உள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் மாதம் ₹2,000 வரை உதவித்தொகை பெறுகின்றனர்.


