News March 31, 2025

₹500-க்காக இளைஞர் குத்திக்கொலை!

image

பணம் மனிதனை மிருகமாக்கும் என்ற சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. நியூ உஸ்மான்பூரில் உள்ள பூங்காவில் அமர்ந்திருந்த தில்ஷித் என்ற நபரிடம் 2 சிறுவர்கள் உட்பட மூவர் பணம் பறிக்க முயன்றனர். தன்னிடம் இருந்த ₹500 தரமறுத்து அவர்களுடன் தில்ஷித் மல்லுக்கட்ட, திடீரென கத்தியை எடுத்து அவரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். தப்பியோடிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Similar News

News January 22, 2026

BREAKING: சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்தார்

image

‘G-RAM-G’ திட்டம் தொடர்பாக நாளை பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஊரக வேலைவாய்ப்பு தொடர்பாக பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவோம் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது என EPS கேள்வி எழுப்பினார். அதற்கு ‘இண்டியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் அதனை கூறியதாக CM கூறினார்.

News January 22, 2026

சட்டமன்றத்தை விட்டு வெளியேறியது ஏன்? EPS விளக்கம்

image

பூஜ்ஜிய நேரத்தில் விவசாயிகள் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்ததாக EPS தெரிவித்துள்ளார். மேலும் கறிக்கோழி வளர்ப்பு பண்ணை தொழிலில் மூலப்பொருள்கள் விலை உயர்வால் வளர்ப்பு கூலியை ₹6.50-லிருந்து ₹20-ஆக உயர்த்த கோரியும் அரசு ஏற்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தாமல் கறிக்கோழி நிறுவனங்களுக்கு சாதகமாக திமுக அரசு செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.

News January 22, 2026

ஜெ., போல விஜய்யும் ஜெயிப்பார்: செங்கோட்டையன்

image

திமுகவும் அதிமுகவும் தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று வருகின்றன. ஆனால், தவெகவோ செயல்படாமல் முடங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், 2011 தேர்தலின்போது மூன்றே இடங்களில் மட்டும் பொதுக்கூட்டம் நடத்தி வெற்றி பெற்ற ஜெ.,வை போல விஜய்யும் வெற்றி பெறுவார் என செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். TTV – OPS ஆதரவாளர்கள் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!