News March 31, 2025

பாடாலூர் அருகே விபத்து-ஒருவர் பலி

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் என்பவர், பெரம்பலூர் மாவட்டம், இரூர் கிராமத்தில் தங்கி கம்ப்ரசர் மோட்டார் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு 8:30 மணியளவில் காரை பிரிவு ரோடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்கும் போது, தேனியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 21, 2025

தீபாவளிக்கு அதிக கூடுதல் பேருந்து இயக்க மைச்சர் முடிவு

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான சா.சி.சிவசங்கர் அவர்களிடம் கேட்டபோது தீபாவளி பண்டிகைக்கு கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவில் பேருந்து வசதி இருக்குமென தெரிவித்துள்ளார். இதைப்பற்றி போக்குவரத்து துறை மேலாண்மை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தப்படும் என்பதையும் தெரிவித்தார்.

News September 21, 2025

பெரம்பலூர்: 12th போதும் அரசு வேலை!

image

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC) சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக மாத சம்பளமாக ரூ.38,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க அக்.6ம் தேதி கடைசி தேதியாகும். SHARE IT.

News September 21, 2025

பெரம்பலூரில் நாம்தமிழர் கட்சி சீமான் விமர்சனம்

image

தமிழ்நாட்டில் 50ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அரசியல் சித்தாந்தத்தை மற்றொரு மாற்று சித்தாந்தத்தால் மட்டுமே வீழ்த்த முடியுமே தவிர சினிமாவால் வீழ்த்த முடியாது, கூட்டத்தை பார்க்காதீர்கள் கொள்கையை பாருங்கள். தவெக தலைவர் நடிகர் விஜய்-க்கு கூடும் மக்கள் கூட்டம் குறித்து பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.

error: Content is protected !!