News March 31, 2025

விஷம் குடித்து தொழிலாளி பலி

image

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் அல்லி (55). குடிபழக்கம் கொண்ட இவர் நேற்றைய தினம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை அவரின் மனைவி குமாரி கண்டிக்க, இதில் விரக்தி அடைந்த அல்லி நேற்று பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை அவரை மீட்ட உறவினர்கள் தர்மபுரி மருத்துவமறையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Similar News

News February 9, 2026

தருமபுரியில் EB பில் எகுறுதா..?

image

தருமபுரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<> இங்கு கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News February 9, 2026

அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்!

image

தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் கடந்த 5-ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து மக்களின் கோரிக்கைக்கு இணங்க இன்று (பிப்.9) முதல் திருப்பத்தூர், திருவண்ணாமலை, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடியிலிருந்து வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் அரசு நிர்ணயித்த கட்டணம் தவிர கூடுதல் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

News February 9, 2026

தருமபுரி: கண நேரத்தில் வாலிபர் மரணம்!

image

கம்பைநல்லூர் அருகே கே.அக்ரஹாரத்தை சேர்ந்த மேளம் அடிக்கும் தொழிலாளி ஆதிபிரகாஷ் (19). இவர் கம்பைநல்லூரில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது நத்தம் மேடு அருகே நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயமடைந்த இவர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!