News March 31, 2025
விரைவில் மாதந்தோறும் மின் கணக்கீடு

மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்திற்கு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அடுத்த 3- 4 மாதங்களுக்குள் தகுதியான நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதன்மூலம், மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற உள்ளது.
Similar News
News April 3, 2025
முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதம்: ராகுல்

வக்ஃப் திருத்த மசோதா என்பது, முஸ்லிம்களை ஓரங்கட்டுவதையும், அவர்களது தனிப்பட்ட சட்டங்களையும், சொத்துரிமைகளை அபகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஆயுதம் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளது. தற்போது முஸ்லிம்களை குறிவைத்துள்ள RSS, பாஜக அடுத்து மற்ற சமூகங்களை குறிவைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மதசுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் இந்த மசோதாவை காங். கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.
News April 3, 2025
BREAKING: வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியது

12 மணி நேரம் காரசார விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்ஃபு திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 288 எம்பிக்களும், எதிராக 232 எம்பிக்களும் வாக்களித்துள்ளனர். இதையடுத்து மாநிலங்களவையில் மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். அங்கு நிறைவேறும் பட்சத்தில் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவர் கையெழுத்திட்டால், சட்டம் நடைமுறைக்கு வரும்.
News April 3, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 225 ▶குறள்: ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். ▶பொருள்: பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.