News March 31, 2025

மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

image

இந்தியா- இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் உறுதியளித்துள்ளார். இலங்கை சென்ற ராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் அமைச்சர் ராமலிங்கத்தை சந்தித்து பேசினர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மீனவர் பிரச்னைக்கு இரு நாட்டு அரசுகளும் நிரந்தர தீர்வு காண வேண்டும் அவர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Similar News

News August 26, 2025

BREAKING: ஓணம் விடுமுறை.. வெளியான ஸ்பெஷல் அறிவிப்பு

image

ஓணம் பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே ஸ்பெஷல் ரயில்களை அறிவித்துள்ளது. ஆக.28-ம் தேதி சென்னை சென்ட்ரல் – கண்ணூருக்கும் (TRAIN NO: 06009), ஆக.30-ம் தேதி பெங்களூரு – கண்ணூருக்கும் (TRAIN NO: 06125) ஸ்பெஷல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் புக் பண்ண தயாரா இருங்க நண்பர்களே..!

News August 26, 2025

16 தொகுதிகள்.. கோயில் நகரங்களை குறிவைக்கும் பாஜக

image

2026 தேர்தல் வேலையை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. இம்முறை இரட்டை இலக்க MLA-க்களை சட்டப்பேரவைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாம். இதனிடையே, முதற்கட்ட விருப்ப தொகுதிகள் பட்டியல் அமித்ஷாவின் கைக்கு சென்றுள்ளது. அதில், பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி, ஸ்ரீரங்கம், தி.மலை உள்ளிட்ட 16 கோயில் நகரங்கள் அந்த பட்டியலில் உள்ளதாம். இதனால், அந்த பகுதியின் அதிமுக தலைகள் சற்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

News August 26, 2025

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ராஜ்நாத் சிங்

image

இந்தியா ஒரு போதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நாம் எப்போதும் முதலில் எந்த நாட்டையும் தாக்கியதில்லை என்பது உலகிற்கு தெரியும் எனவும், ஆனால் ஆபத்து வரும்போது சரியான பதிலடியை எப்படி கொடுப்பது என்பது நமக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!