News March 31, 2025
தேசியத்தின் அடையாளம் RSS: பிரதமர்

சனாதன தர்மம், ஒற்றுமை, தேசியத்துவத்தின் அடையாளமாக RSS திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் அழிவற்ற கலாசாரத்தில் ஆலமரமாக திகழ்வதோடு, நவீன காலத்தின் சவால்களுக்கு தீர்வுகளும் கூறுவதாகவும், கல்வி, சுகாதாரம், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல துறைகளில் RSS-ன் சேவைப்பணிகள் மகத்தானது எனவும் பாராட்டியுள்ளார். மேலும், RSS தன்னார்வலர்கள் தன்னலமின்றி பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 3, 2025
முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதம்: ராகுல்

வக்ஃப் திருத்த மசோதா என்பது, முஸ்லிம்களை ஓரங்கட்டுவதையும், அவர்களது தனிப்பட்ட சட்டங்களையும், சொத்துரிமைகளை அபகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஆயுதம் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளது. தற்போது முஸ்லிம்களை குறிவைத்துள்ள RSS, பாஜக அடுத்து மற்ற சமூகங்களை குறிவைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மதசுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் இந்த மசோதாவை காங். கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.
News April 3, 2025
BREAKING: வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியது

12 மணி நேரம் காரசார விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்ஃபு திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 288 எம்பிக்களும், எதிராக 232 எம்பிக்களும் வாக்களித்துள்ளனர். இதையடுத்து மாநிலங்களவையில் மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். அங்கு நிறைவேறும் பட்சத்தில் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவர் கையெழுத்திட்டால், சட்டம் நடைமுறைக்கு வரும்.
News April 3, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 225 ▶குறள்: ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். ▶பொருள்: பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.