News March 31, 2025
Vodafone கொடுத்த ₹36,950 கோடி.. ஓகே சொன்ன அரசு

Vodafone Ideaவின் ₹36,950 கோடி மதிப்பிலான பங்குகளை கையகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள ஸ்பெக்ட்ரம் ஏல நிலுவைத் தொகைக்கு ஈடாக, பங்குகளை பெற அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ள அந்நிறுவனத்தின் 22.6% பங்குகள் அரசிடம் உள்ள நிலையில், தற்போதைய அறிவிப்பின் படி அது 48.99% உயரும். இதன்மூலம், அந்நிறுவனத்தின் மிகப்பெரிய ஒற்றை பங்குதாரராக அரசு மாறும்.
Similar News
News April 3, 2025
வக்ஃப் சட்ட (திருத்த) மசோதா: பாஜக செய்யும் மாற்றம் என்ன?

வக்ஃப் சட்ட திருத்தத்தின்படி, வக்ஃப் வாரியம் தன் சொத்துகளை மாவட்ட கலெக்டர்களிடம் பதிவு செய்யவேண்டும். இதனால் சரியான மதிப்பீட்டை செய்யமுடியும். தற்போது வக்ஃப் உறுப்பினர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இனி அனைத்து உறுப்பினர்களும் அரசால் பரிந்துரைக்கப்படுவர். தலைமை செயல் அலுவலர் (mutawallis), 6 மாதங்களுக்குள் சொத்து விவரங்களை பதிவேற்ற வேண்டும். அரசு தணிக்கை செய்யும்.
News April 3, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் – 03 ▶பங்குனி – 20 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:00 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM – 10:30 AM ▶திதி: சஷ்டி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: சுவாதி ▶நட்சத்திரம்: ரோகிணி ம 12.32
News April 3, 2025
வக்ஃபு விவகாரம்.. காங். MLA மரண எச்சரிக்கை

வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறினால் உயிரை மாய்த்து கொள்வேன் என பீகார் காங். MLA இஷார்குல் ஹுசைன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்னை மட்டும் அல்ல, அடுத்ததாக குருத்வாரா, தேவாலயங்கள், கோயில்களின் நிலங்களை கைப்பற்ற அரசு இதுபோன்றதொரு மசோதாவை கொண்டுவரும் எனவும் அவர் கூறியுள்ளார். முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இப்படி செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.