News April 2, 2024

மக்களவைத் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்

image

மக்களவைத்  தேர்தல் திருவிழா அழைப்பிதழ் தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா ஏப்ரல் -19 மறக்காமல் வாக்களிப்பீர் ! என்று அழைப்பிதழை நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்டுள்ளார். இதன்படி
இவ்விழாவில் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது மக்களவைத் தொகுதியில் 100% வாக்குப்பதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்டிட அன்புடன் அழைக்கின்றோம்.

Similar News

News November 10, 2025

நீலகிரி மக்களே.. 2 நாட்கள் எச்சரிக்கை!

image

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வரும் நவ.12,13 ஆகிய 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே, மக்களே வெளியில் செல்லும்போது குடையுடன் போங்க. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

நீலகிரியில் பெரும் அச்சத்தில் மக்கள்!

image

நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூராட்சி, மாணிக்கலாடி பகுதியில் வசிக்கும் ஹரிதாஸ் என்பவரின் பசுமாடு, அவர் வீட்டின் அருகே இருந்த ஒரு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு மறைந்திருந்த புலி, அந்த பசுவை அடித்து கொன்றது. இச்சம்பவத்தால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 10, 2025

தேவர்சோலை: பசுவை வேட்டையாடிய புலி

image

தேவர்சோலை பேரூராட்சி மாணிக் கல்லாடி பகுதியில் வசித்து வரும் அரிதாஸ் என்பவரின் பசுமாடு இவரது வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் மேய்ச்சலில் இருந்தபொழுது அப்ப இதில் மறைந்திருந்த புலி பசுவை அடித்துக் கொன்றது, இதனால் இப்பகுதியில் உள்ள கால்நடை விவசாயிகள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர், மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வனத்துறையின விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!