News March 30, 2025
நம்பியூரில் பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பலி

நம்பியூர் அருகே உள்ள அப்பியபாளையத்தைச் சேர்ந்த, பள்ளி மாணவன் ரோஹித் (13). இந்த மாணவர் தனது நண்பர்களான சதீஷ்குமார், ரித்தீஷ், ஹரி சுதன், மூவருடன் சேர்ந்து, அருகில் உள்ள குளத்திற்கு மீன் பிடிக்க சென்றனர். மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது கால் தவறி குளத்துக்குள் விழுந்து விட்டனர். அருகில் இருந்து ஆடு மேய்த்த பெண் ஒருவர் மூன்று பேரை துண்டு போட்டு காப்பாற்றினார். ரோகித் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
Similar News
News April 2, 2025
ஈரோடு: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு, அந்தியூர் அருகே கொள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. இவர் தேர்வு சரியாக எழுதவில்லை என, மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 2, 2025
நலவாரிய ஓய்வூதியர் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வழிவுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் நலவாரியங்களில்பதிவு பெற்ற 60வயது நிறைவடைந்த, 11,000 மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் ஆயுள் சான்றை, உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 2025-26-ஆம் ஆண்டுக்காக ஆண்டு ஆயுள் சான்றை ஏப்30-ஆம் தேதிக்குள் https://tnuwwb.tn.gov.inஎன்ற இணையதள முகவரிமூலம், உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.
News April 2, 2025
ஈரோட்டில் வேலை வாய்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (BANKING TRAINEE)உள்ள காலி பணியிடங்கைள நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000- ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் <