News March 30, 2025
சேலம்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு

சேலத்தில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியைப் பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்துத்தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News April 2, 2025
இங்கு மாம்பழம் தந்தால் கடன் தீரும்… !

சேலம்: அம்மாபேட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது குமரகிரி மலையில் அமைந்திருக்கும் தண்டாயுடபாணி கோயில். இங்கு மாம்பழம் தந்து வழிபட்டால் தொழிற் வளர்ச்சி மேம்படும், கடன் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஞானப் பழத்திற்காக நடந்த சண்டையில் வெளியேறிய முருகன் இளைப்பாறிய இடம் இது என்பது இத் தலத்தின் வரலாறு. கடன் பிரச்சனையில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News April 2, 2025
சேலத்தில் வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,870.50 ஆக நிர்ணயம்!

நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூபாய் 43.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 1,870.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
News April 2, 2025
சேலம்: வெயிலில் வேலை செய்வோர் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாகவே உள்ளது. எனவே, தமிழக பொது சுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. அதில், வெளியில் வேலை செய்பவர்கள், பகல் 12 முதல் 3 மணி வரை வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வேலை செய்ய வேண்டுமெனில் நிழலான இடத்தில் அடிக்கடி ஓய்வெடுத்து கொள்வதும், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதும் அவசியம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT!