News March 30, 2025
மதுரை: வாரச்சந்தை ஏலம் அறிவிப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சிக்குட்பட்ட செக்கானூரணி கிராமத்தில் வாரச்சந்தை 2025-26-ம் ஆண்டிற்கான ஏலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் மூடி முத்திரையிடப்பட்ட விண்ணப்பங்களை 03.04.2025-ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணி வரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News April 2, 2025
‘கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப் போராட்டம் தேவை’

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டியளித்துள்ளார். அதில், கச்சத்தீவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் சட்டப் போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு மீனவர்களின் உயிர், உடைமை பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது என்றார்.
News April 2, 2025
மதுரை: ஒரே மேடையில் சாலமன் பாப்பையா மற்றும் சசிகுமார்

மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-வது மாநாடு நடைபெற்று வருகிறது. முதல் நாள் கலை நிகழ்வில் ஆசிரியர் சாலமன் பாப்பையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். சிறப்பு விருந்தினராக இயக்குனரும் நடிகருமான சசிகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக காலையில் கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
News April 2, 2025
மதுரை – திருவனந்தபுரம் ரயிலில் 2 கூடுதல் பெட்டிகள் இணைப்பு

முன்பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக மதுரை – திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இந்த புதிய வசதி திருவனந்தபுரம் – மதுரை ரயிலில் (16343) ஜூன் 05 முதலும் மதுரை – திருவனந்தபுரம் ரயிலில் (16344) ஜூன் 06 முதலும் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி குறைக்கப்படுகிறது.