News March 30, 2025
ஆசை ஆசையாய் வாங்கிய கார்- தற்கொலையில் முடிந்த சோகம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் முருங்கை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்ற இளைஞர் கடன் மூலம் கார் வாங்கி ஆசை ஆசையாய் ஓட்டி வந்தார். ஒருகட்டத்தில் தவனை தொகையை செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்த அவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து 27ம் தேதி தற்கொலை முயற்சி செய்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.
Similar News
News September 29, 2025
செங்கல்பட்டில் 4,713 பேர் ஆப்சென்ட்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் 645 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் நேற்று (செப்.28), தமிழகம் முழுவதும் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில், மேற்கண்ட தேர்விற்கு 15,504 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 56 தேர்வு மையங்கள் மாவட்ட நிர்வாகம் அமைத்திருந்தது. இதில் 4,713 பேர் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 28, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் இன்று (செப்.28) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 28, 2025
செங்கல்பட்டு: IOB வங்கியில் வேலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, MBA, M.Sc, MCA, M.E/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் Rs.64,820 முதல் Rs.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி 03.10.2025 ஆகும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <