News March 30, 2025
இடுவாய் சித்தி விநாயகர் கோயில்!

திருப்பூர், இடுவாயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோயில் உள்ளது. விநாயகர் 5 தலைமுறைகளை கடந்து, குளத்தேரி பகுதியில் இருந்துள்ளார். பின்னர் 1995ஆம் ஆண்டு ஊர் மக்கள், சித்தி விநாயகருக்கு கோயில் கட்டி பிரதிஷ்டை செய்தனர். சக்திவாய்த சித்தி விநாயகரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணம் கைகூடுமாம். இதனால் இங்கு வெளியூர்களில் இருந்து வந்து, பக்தர்கள் விநாயகரை தரிசிக்கின்றனர்.
Similar News
News April 2, 2025
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில்!

திருப்பூர் அவிநாசியில், சுமார் 2000 ஆண்டுகள் பழமையான லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சக்திவாய்ந்த அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், நவகிரக தோஷங்கள் நீங்குமாம். பிரதோஷம், அமாவாசை தினங்களில் இங்கு சென்று வழிபாடு செய்தால், திருமணத்தடை நீங்குவதோடு, குடும்ப ஒற்றுமை அதிகரித்து, பிரிந்த தம்பதி ஒன்று சேர்வார்களாம். திருமணத்தடை, குடும்ப பிரச்சனை உள்ளவர்களுக்கு இதை Share பண்ணுங்க.
News April 2, 2025
அங்கன்வாடி பணிக்கு பயிற்சி

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை இங்கு <
News April 2, 2025
BREAKING: தங்கையை கொன்ற அண்ணன் கைது

திருப்பூர், பருவாய் கிராமத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதில் சந்தேகம் ஏற்பட்டதால் நேற்று புதைக்கப்பட்ட அவரின் உடலை தோண்டி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனை மற்றும் போலீசாரின் விசாரணையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணை காதலித்ததால் வித்யாவின் சகோதரர் சரவணன் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.