News March 30, 2025

விழுப்புரம் விவசாயிகள் கவனத்திற்கு 

image

விழுப்புரம் மாவட்டத்தில் பி.எம் கிசான் ஊக்கத்தொகை பெறும் 89,958 விவசாயிகளில் தற்போது வரை 50,404 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 39,554 விவசாயிகள் ஏப்ரல் -8 ஆம் தேதிக்குள் தனி அடையாள எண் பெற வேண்டும், அப்போதுதான்  பி.எம் கிசான் ஊக்கத்தொகை  தொடர்ந்து பெற முடியும்  என்று வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 2, 2025

பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உடையாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் பட்டா மாற்ற ரூ.5,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.தனியார் விடுதியில் வைத்து லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.மேலும் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 2, 2025

சனி தோஷம் நீக்கும் கல்பட்டு சனி பகவான்

image

சனி தோஷத்தை நீக்கும் புகழ் பெற்ற கோயிலாக உள்ளது விழுப்புரம் மாவட்டம் கல்பட்டில் உள்ள சனீஸ்வரர் கோயில். இங்கு சனி பகவான் 21 அடி உயரத்தில் வலது காலை காகத்தின் மீது வைத்து காட்சி தருகிறார். ஏழரை சனி, கண்ட சனி, வக்ர சனி, விரய சனி என்று எந்த சனி தோஷத்தால் பாதிப்பு இருந்தாலும் ஒருமுறை இக்கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் போதும். அவை யாவும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News April 2, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் பி.டி.ஓ.க்கள் பணியிட மாற்றம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 18பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, ரவி, வெங்கடசுப்ரமணியன், ராஜவேல், சிவநேசன், சையது முகம்மது, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட 18 பி.டி.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!