News March 30, 2025
66 வயதில் 10வது குழந்தை பெற்ற பெண்

ஜெர்மனியில் 66 வயது பெண், 10ஆவது குழந்தை பெற்றுள்ளார். பெர்லினைச் சேர்ந்த அலெக்சாண்ட்ராக்கு, அறுவை சிகிச்சையின்றி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் உடல் எடை ஏழேகால் பவுண்ட். அக்குழந்தைக்கு பிலிப் என அவர் பெயரிட்டுள்ளார். அலெக்சாண்ட்ராக்கு 1970இல் முதல் குழந்தையும், பிறகு 8 குழந்தைகளும் பிறந்தன. உகாண்டாவில் 70 வயது பெண்ணுக்கு அண்மையில் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 3, 2025
வக்ஃப் (திருத்த) சட்ட மசோதா என்பது என்ன?

நாடு முழுவதும் உள்ள வக்ஃப் வாரியங்களின் செயல்பாட்டை திருத்தியமைத்து, அவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்பை உறுதிப்படுத்த புதிய சட்ட மசோதா வழி செய்கிறது. இதற்காக1995-ல் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு கூடுதல் உரிமைகள் வழங்கவும் இதில் வழி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News April 3, 2025
பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியில் புது உச்சம்

பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா புது உச்சம் படைத்துள்ளது. 2025ம் நிதியாண்டில் மட்டும் இந்தியா தனது நட்பு நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு பிரமோஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்களை ரூ.23,622 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2024ம் நிதியாண்டில் ஏற்றுமதி செய்த ரூ.21,803 கோடி பாதுகாப்பு தளவாடங்களுடன் ஒப்பிடுகையில் இது 12.04% அதிகமாகும். ரூ.23,622 கோடியில் தனியாரின் பங்களிப்பு ரூ.8,389 கோடியாகும்.
News April 3, 2025
விடிய விடிய மழை கொட்டும்

தமிழகத்தில் இன்று இரவு தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.