News March 30, 2025
இந்தியாவின் பணக்கார ஊர்: பேங்கில் மட்டும் ₹7,000 கோடி!

இந்தியாவின் ஒரு கிராம மக்கள் மட்டும் சுமார் ₹7,000 கோடியை வங்கியில் வைத்திருக்கிறார்கள். 32,000 பேர் வசிக்கும் குஜராத்தின் மாதப்பர் தான் ஆசியாவின் பணக்கார கிராமம். வெளிநாட்டில் செட்டிலான இக்கிராமத்தை சேர்ந்த 1,200 குடும்பத்தினர் அனுப்பும் பணம்தான் இங்கு வந்து குவிகிறது. ஊர் மக்கள் சேர்ந்து தங்கள் கிராமத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, பெரிய நகரங்களுடன் போட்டியிடம் அளவிற்கு மாற்றியிருக்கின்றனர்.
Similar News
News February 8, 2026
இனி சேப்பாக்கத்தில் விசில் போட முடியாது

NZ, AGF இடையேயான உலகக் கோப்பை போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற நிலையில், மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. விசிலுக்கான தடை குறித்து ICC, BCCI தரப்பில் எந்த விதிமுறையும் இல்லை. ஆனால், உள்ளூர் கிரிக்கெட் வாரியம், போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News February 8, 2026
நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. வந்தாச்சு HAPPY NEWS

<<19007011>>கல்விக் கடன், மாற்றுத் திறனாளி கடன்<<>> போன்றவை தள்ளுபடி செய்யப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த தேர்தலைப்போல், இப்போதும் நகைக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கான நடவடிக்கையை திமுக அரசு தொடங்கிவிட்டதாம். கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் இருக்கும் நகைக் கடன் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் நல்ல செய்தி வெளியாகும்.
News February 8, 2026
EV கார்களுக்கு ₹3.80 லட்சம் வரை தள்ளுபடி!

டாடா மோட்டார்ஸ் தனது EV கார்களுக்கு ₹3.80 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்து வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக TATA Curvv மாடலுக்கு, வேரியண்ட்களை பொறுத்து ₹3.80 லட்சம் – ₹3.30 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் Harrier (₹1.5 லட்சம்), Punch (₹1.6 லட்சம்), Tiago (₹1.5 லட்சம்), மற்றும் Nexon (₹1.2 லட்சம்) ஆகிய மாடல்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.


