News March 30, 2025

மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம்

image

பிற்பகல் (12 -3 மணி வரை) நேரத்தில் கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் வெளியே வராமல், வீட்டிலேயே இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சு. கேட்டுக்கொண்டார். வெயில் காலத்தில் தர்ப்பூசணி நல்ல நீர்ச்சத்து உள்ள பழம் என்றும் இந்த பழத்தை உட்கொள்வது நல்லது என்றாலும், தீய நோக்கம் கொண்டவர்கள், கலப்படம் செய்வதாகவும் கூறினார். இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

Similar News

News April 2, 2025

அமெரிக்க டிவி நடிகை பேடி மலோனி காலமானார்

image

லிட்டில் ஹவுஸ் ஆன் பிரெய்ரர், ஸ்டார் வார்ஸ் ஹாலிடே ஸ்பெஷல் உள்ளிட்ட அமெரிக்க டிவி தொடர்களில் நடித்தவர் பேடி மலோனி. 2010ம் ஆண்டு முதல் உடல்நலக்குறைவாலும், வயோதிகம் காரணமாகவும் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் மலோனி (82) உயிரிழந்ததாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 2, 2025

சொந்த மண்ணில் திணறும் RCB

image

குஜராத் அணிக்கு எதிரான IPL போட்டியில் RCB அணி 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற GT அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய RCBயின் துவக்க வீரர் கோலி 7 ரன்களில் அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி, RCB 6.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்துள்ளது.

News April 2, 2025

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்.. சட்டம் சொல்வதென்ன?

image

தீவிரவாத செயல்களில் ஈடுபடுதல் அல்லது அதற்கான முயற்சியில் இருப்போருக்கு அடைக்கலம் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 113ஆவது பிரிவின் 6ஆவது உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், அந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!