News March 30, 2025
புதுவையில் காவலர்கள் திடீர் மாற்றம்

புதுவை காவல் தலைமையகத்தின் எஸ்.பி சுபம் கோஷ் வெளியிட்ட அறிவிப்பில், இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி சிக்மா நுண்ணறிவு பிரிவிற்கும், வரதராஜன் போதை பொருட்கள் தடுப்பு பிரிவிற்கும், செந்தில்குமார் சிக்மா செக்யூரிட்டி, ஆடலரசன் ஏனாம் காவல் நிலையம், அனில்குமார் மாஹே காவல் நிலையம், சப் இன்ஸ்பெக்டர்கள் குமரவேல் ஒதியஞ்சாலை, பிரபு பாகூர் காவல் நிலையத்திற்கும் என இடம் மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 5, 2026
புதுச்சேரி: ரூ. 5.47 கோடி காசோலை வழங்கல்

ஆரியபாளையம் – வில்லியனூர் பகுதியில் இயங்கி வரும் புதுச்சேரி சாராய வடிசாலை (Pondicherry Distilleries Limited) நிறுவனத்தின் சார்பில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கான (2021-2024) லாப பங்கு ஈவுத்தொகை வழங்கப்பட்டது. இதற்கு ரூ.5,47,49,928 மதிப்பிலான காசோலையை, சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், முதலமைச்சர் ரங்கசாமி அவர்களிடம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
News February 5, 2026
புதுச்சேரி: டிகிரி போதும் -அரசு வேலை

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் UPSC-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 933
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,32,000
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 24.02.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 5, 2026
புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு மின்னஞ்சல் (Email) வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். மோப்ப நாய்கள் உதவியுடன் தூதரக வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து, சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


