News March 30, 2025

நண்பன் மனைவியிடம் பழக்கம்.. RCB ரசிகர் கொலை

image

சென்னையில், CSK தோல்வியை கிண்டல் செய்த RCB ரசிகர் ஜீவரத்தினத்தை, சக நண்பர்களே அடித்துக் கொன்றதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில், பெண் விவகாரத்தில் நடந்த கொலை என தெரியவந்துள்ளது. நண்பன் அப்புவின் மனைவியிடம் ஜீவரத்தினம் பழகி வந்திருக்கிறார். இதை அறிந்த அப்பு, ஜீவரத்தினத்தை RCB வெற்றியை கொண்டாடுவதுபோல் வரவழைத்து நண்பர்கள் உதவியுடன் கொலை செய்துள்ளார்.

Similar News

News April 2, 2025

ராமரை பாடிக் கொண்டே உயிரை விட்ட பிரபலம்

image

தமிழில் கம்பராமாயணம் போல், ஹிந்தியில் ராமரின் வரலாற்றை சொல்வது துளிசிதாசரின் ராம சரித மானஸ். இதுபற்றி சொற்பொழிவு ஆற்றுவதில் பிரபலமானவர் ஒடிசாவை சேர்ந்த பேரா.கோபால் பிரசாத் பேஜ். சப்ரங் என்ற இடத்தில் கோயில் திருவிழாவில் 3 நாள் சொற்பொழிவு நிகழ்த்த சென்ற கோபால் பிரசாத், 2-ம் நாளில் மேடையில் ராமரின் புகழைப் பேசிக் கொண்டிருந்தபோதே, சுருண்டு விழுந்து இறந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

News April 2, 2025

கச்சத்தீவு விவகாரம்: ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி

image

கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது யார் என நாட்டு மக்களிடம் ஸ்டாலின் எடுத்துரைக்க வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டபோது மத்தியிலும், தமிழகத்திலும் எந்த கட்சி ஆட்சியில் இருந்தது என ஸ்டாலின் எடுத்துரைக்க வேண்டும் என்றார். கச்சத்தீவை ஒப்படைத்த காங்கிரஸூடன் திமுக ஏன் கூட்டணியில் உள்ளது எனவும் வினவினார்.

News April 2, 2025

என்னடா நடக்குது இங்க!

image

நடப்பு ஐபிஎல் தொடர் விசித்திரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி, முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகள் மொத்தமாக ஒரே ஒரு IPL கோப்பையை (GT) மட்டுமே வென்றிருக்கிறது. ஆனால், கடைசி 6 இடங்களில் இருக்கும் அணிகள் மொத்தமாக 15 கோப்பைகளை வென்றிருக்கின்றன. அதாவது, சூப்பர்ஸ்டார் அணிகள் அனைத்தும் இந்தமுறை வீழ்ச்சியை கண்டுள்ளன.

error: Content is protected !!