News March 30, 2025
₹500 கோடிக்கு Income Tax மோசடி

தமிழகத்தில் மிகப்பெரிய வருமான வரி மோசடி நடந்துள்ளதாக IT-யின் புலனாய்வு பிரிவு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. பொது & தனியார் நிறுவன ஊழியர்கள் போலி ஆவணங்கள் மூலம் ₹500 கோடிக்கு வருமான வரி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. குறிப்பாக, 22,500 பேர் போலி ஆவணங்கள் மூலம் ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
Similar News
News January 22, 2026
அரிசி ரேஷன் கார்டுக்கு மாற வேண்டுமா?

பொங்கல் பரிசாக தமிழக அரசு ₹3,000 வழங்கிய நிலையில், அதை அரிசி அட்டை இல்லாதவர்கள் பெறமுடியாமல் போனது. இதுதொடர்பாக, சட்டமன்றத்தில் எழுப்பப்பட கேள்விக்கு அமைச்சர் சக்ரபாணி முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். தகுதியுள்ளவர்கள் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், துறை சார்ந்த அதிகாரிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
News January 22, 2026
வைத்திலிங்கம் அதிர்ச்சி.. அதிமுகவில் மீண்டும் சேர்ந்தனர்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று திமுகவில் இணைந்தார். இதனால் அதிருப்தியடைந்த அவரின் தீவிர விசுவாசிகளாகவும், OPS ஆதரவாளர்களாகவும் இருந்த தஞ்சை சண்முகப்பிரபு, சுவாமிநாதன், செல்லதுரை, ஜெகதீசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இன்று EPS-ஐ நேரில் சந்தித்து மீண்டும் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். விரைவில் பிரமாண்ட இணைப்பு விழா நடத்த திட்டமிட்ட வைத்திலிங்கத்திற்கு, இது அதிர்ச்சி அளித்துள்ளது.
News January 22, 2026
உடனே செய்யுங்க: அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளதாக <<18921270>>சுகாதாரத்துறை <<>>எச்சரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு பதிவான பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், எலிசா பரிசோதனைகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்களை கையிருப்பில் வைத்திருக்கவும், ஹாஸ்பிடல்களில் பிரத்யேக வார்டுகளை அமைக்கவும் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


