News March 30, 2025

விருதுநகரில் மாவட்ட அளவிலான பெண்கள் கபடி, கையுந்து போட்டி

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சித்திரை திருநாளை முன்னிட்டு ஏப்.9,10 அன்று பெண்களுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற உள்ளது. கபடி போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 9488151214, 9994511966, 9865071770 என்ற எண்ணிலும் கையுந்து போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 9994160149, 9894693210 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.1.20 லட்சம் வழங்கப்படும்.

Similar News

News January 23, 2026

விருதுநகர்: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா விருதுநகர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு04562-252388 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

News January 23, 2026

விருதுநகர்: ரூ.555 செலுத்தினால்., ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸை அனுகவும். இதனை SHARE IT.

News January 23, 2026

ஸ்ரீவி: ராணுவ வீரர் வீட்டில் திருடியவர் கைது

image

பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த கண்ணன் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவரது மனைவி லட்சுமிதேவி சிவகாசியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு பெருமாள்தேவன்பட்டியில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் பணம் மற்றும் வெள்ளி கொலுசை திருடி சென்றனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சாந்தகுமாரை கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!