News March 30, 2025

நாகை மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

image

அனைத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு தனி அடையாளம் கொண்ட அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டை உள்ளவர்கள் மட்டுமே இனிமேல் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகள் விவசாய கடன் பெற முடியும். மாவட்டத்தில் சுமார் 7000 விவசாயிகள் இந்த அட்டை பெறவில்லை. இந்த அட்டை பெற நாளையே (மார்ச்.31) கடைசி நாள் எனவே விவசாயிகள் உடனே தங்கள் அடையாள அட்டையை பெற்றிடுமாறு ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

Similar News

News April 2, 2025

திருமணத்தடையை நீக்கும் பெருமாள்

image

நாகையில் பிரசத்தி பெற்ற சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 19வது திவ்ய தேசமாகும். திருமணமாகதவர்கள் இங்கு சென்று மூலவரான பெருமாளை பிரார்த்தித்தால், நீண்ட நாள் திருமணத்தடை நீங்கும். திருமணமாகிய பிறகு பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் துளசி மாலை சாத்த பிரார்த்தனை நிறைவுறும். உடனே வரன் தேடும் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News April 2, 2025

நாகையில் மழைக்கு வாய்ப்பு

image

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், நாகையில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2025

அகில இந்திய நுழைவு தேர்வுக்கு பயிற்சி – ஆட்சியர்

image

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் இதர வகுப்பை சேர்ந்த 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அகில இந்திய நுழைவு தேர்வில் (JEE Mains)கலந்து கொள்ள உணவு, தங்குமிடம் பயிற்சி கட்டணம் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கு பெற விரும்புவோர் நாகை மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

error: Content is protected !!