News March 30, 2025
தினமும் சாமி கும்பிடும்போது.. முழு பலன் பெற..

கடவுளை தூய மனதுடன் வழிபடவோ, வீட்டில் பூஜை செய்ய முடியவில்லை என்றால் அதற்கு கர்ம வினைகளே காரணம். இவற்றை மாற்ற வேண்டும் என நினைத்தால், இந்த 3 விஷயங்களைக் கண்டிப்பாக செய்யுங்கள். இறைவனை வழிபடும்போது கைகளால் பூக்களைத் தூவி, வாய் முழுக்க கடவுள் மந்திரங்களை ஓதிமனதை ஒருநிலைப்படுத்தி வழிபட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே முழு பலனையும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
Similar News
News April 2, 2025
அமெரிக்க டிவி நடிகை பேடி மலோனி காலமானார்

லிட்டில் ஹவுஸ் ஆன் பிரெய்ரர், ஸ்டார் வார்ஸ் ஹாலிடே ஸ்பெஷல் உள்ளிட்ட அமெரிக்க டிவி தொடர்களில் நடித்தவர் பேடி மலோனி. 2010ம் ஆண்டு முதல் உடல்நலக்குறைவாலும், வயோதிகம் காரணமாகவும் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் மலோனி (82) உயிரிழந்ததாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News April 2, 2025
சொந்த மண்ணில் திணறும் RCB

குஜராத் அணிக்கு எதிரான IPL போட்டியில் RCB அணி 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற GT அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய RCBயின் துவக்க வீரர் கோலி 7 ரன்களில் அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி, RCB 6.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்துள்ளது.
News April 2, 2025
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்.. சட்டம் சொல்வதென்ன?

தீவிரவாத செயல்களில் ஈடுபடுதல் அல்லது அதற்கான முயற்சியில் இருப்போருக்கு அடைக்கலம் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 113ஆவது பிரிவின் 6ஆவது உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், அந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.