News March 30, 2025

10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்த இந்தியா? ஆளுநர்

image

200 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரத்தின் உலகின் முதல் நாடாக இருந்த இந்தியா, காலனி ஆட்சியில் மிகவும் பின்னோக்கி சென்றதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியாவை உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை, ஆனால் தற்போது புரட்சிகர மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், 2047 சுதந்திர தினத்தின் போது, இந்தியா வல்லரசாக ஒவ்வொருவரின் பங்களிப்பும் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 2, 2025

BREAKING: பெங்களூரு அணி பேட்டிங்

image

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி பேட்டிங் செய்யவுள்ளது. போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்போட்டியை ஸ்டார் ஸ்பாேர்ட்ஸ் டிவி சேனல்கள், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையாக காணலாம்.

News April 2, 2025

இந்தியாவின் பணக்கார பெண் இவர்தான்…!

image

இந்தியாவில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், டாப் 10-ல் இருக்கும் ஒரே பெண் சாவித்ரி ஜிண்டால் மட்டுமே. ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவரான அவர், நாட்டின் மூன்றாவது பணக்காரராகவும், முதல் பெண் பணக்காரராகவும் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.3.03 லட்சம் கோடி. இந்த பட்டியலில் அம்பானி (ரூ.7.90 லட்சம் கோடி), அதானி (ரூ.4.80 லட்சம் கோடி) முதல் 2 இடங்களில் உள்ளனர்.

News April 2, 2025

IPL: கேப்டன் மாற்றம்

image

காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருந்த சஞ்சு சாம்சன் மீண்டும் கேப்டனாக அணிக்கு திரும்புகிறார். முதல் 3 போட்டிகளில் ரியான் பராக் வழிநடத்த இம்பேக்ட் பிளேயராக மட்டுமே அவர் களமிறங்கி இருந்தார். தற்போது காயத்தில் இருந்து குணமடைந்த சஞ்சு, கேப்டனாக விளையாட இருக்கிறார். ராஜஸ்தான் அணி அடுத்ததாக ஏப்.5-ல் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

error: Content is protected !!