News March 29, 2025

கோயில்களில் சாதி பெயருடன் விழா கூடாது – ஐகோர்ட்

image

கோயில் திருவிழாக்களில் சாதி பெயரால் ஏற்படும் மோதல்கள் ஏராளம். இதனை தடுக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, கோயில்களில் திருவிழா நடத்த ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு நாள் ஒதுக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பக்தர்கள், ஊர் மக்கள் என்ற அடிப்படையில் விழா நடத்த அனுமதிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News April 2, 2025

அலர்ட்: இன்று கனமழை

image

இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

News April 2, 2025

வெளிநடப்பு செய்தார் இபிஎஸ்

image

கச்சத்தீவு தீர்மானம் தொடர்பான விவாதத்தில் தங்களை முழுமையாக பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் கச்சத்தீவை வைத்து திமுக நாடகம் நடத்தியதாக சாடினார். தேர்தலை வைத்து கச்சத்தீவு தீர்மானத்தை தற்போது திமுக கொண்டு வந்துள்ளதாகவும் இபிஎஸ் விமர்சித்தார். 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தீர்கள் எனவும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

News April 2, 2025

‘கடத்தல் நாயகி’யிடம் இருந்து விவாகரத்து கோரும் கணவர்?

image

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவை விவாகரத்து செய்ய அவரது கணவர் ஜதின் ஹுக்கேரி தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் திருமணமாகி 4 மாதங்களே ஆகின்றன. தங்கக் கடத்தலில் நடிகை சிக்கி இருப்பதால் கணவர் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் கைதானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!